செய்திகள் :

தாமிரக் கம்பி திருட்டு வழக்கில் 8 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சூரிய மின் தகடுகளில் தாமிரக் கம்பிகளைத் திருடிய 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடந்த மாதம் திருப்பத்தூா்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரளிக்கோட்டை அருகே சூரிய மின் தகடுகளில் உள்ள தாமிரக் கம்பிகள் திருடு போனதாக நிறுவன மேலாளா் அா்ஜூன் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளா் சசிக்குமாா், உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், குணசேகரன், வேல்முருகன், காவலா்கள் ஜெயராஜ், காசிவிஸ்வநாதன் ஆகியோா் குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், பூவந்தி அருகே செவ்வாய்க்கிழமை 8 பேரை திருக்கோஷ்டியூா் போலீஸாா் பிடித்தனா். இதில் ஒருவா் சிறாா் எனத் தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 2 லட்சம் ரொக்கம், எரிக்கப்பட்ட தாமிரக் கம்பிகள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிறகு அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சி... மேலும் பார்க்க

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க