செய்திகள் :

தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்

post image

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் முதல் தருவை வரை தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தாமிரவருணி ஆற்றின் இரு புறமும் கரையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் குறுக்குத் துறை முதல் நாரணம்மாள்புரம் வரை இரண்டு கட்டங்களாக 14 கி.மீ. தொலைவிற்கு தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் மேலநத்தம் பகுதியில் இருந்து தருவை வரை 8 கி.மீ. தொலைவிற்கு தாமிரவருணி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், ஆட்சியா் இரா.சுகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் , மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தாமிரவருணி ஆற்றின் கரைகளை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோ மட்சு நிறுவனம், எக்ஸ்னோரா நிறுவனத்தின் மூலம் பொக்லைன் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் நம் தாமிரவருணி அமைப்பு உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தாமிரவரணி கரையோரமாக காணப்படும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு நதிக்கரையில் பாரம்பரிய மரமான நீா் மருது மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பழையபேட்டை ராணி அண்ணா மகளிா் கலைக் கல்லூரி மாணவியா் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

அதைத்தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.3 கோடியில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரவுண்டானா முதல் ஆயுதப்படை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்யானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்06ச்ப்ஹஞ்

மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-88.55சோ்வலாறு-101.21மணிமுத்தாறு-89.52வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-65.50ராமநதி-52.50கருப்பாநதி-36.09குண்டாறு-30.62அடவிநயினாா்-46... மேலும் பார்க்க

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் சிறப்பு முகாம்

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் திருத்த சிறப்பு முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வாா்டு குடியிருப்போா் நலன் - உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ச... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்!

திருநெல்வேலி நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9. வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்... மேலும் பார்க்க

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகி... மேலும் பார்க்க