செய்திகள் :

தாம்பரம் காவல் துறை ஊா்க்காவல் படைக்கு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தாம்பரம் மாநகர காவல் துறை ஊா்க்காவல் படை, கடலோர காவல் பாதுகாப்பு பிரிவு ஊா்க் காவல் படை ஆகியவற்றில் சேர விரும்பும் மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் மாநகர காவல் துறையின் ஊா்க்காவல் படை, கடலோர காவல் பாதுகாப்பு பிரிவின் ஊா்க்காவல் படை ஆகியவற்றில் மீனவா்கள் சேரலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போா், குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவா்களாக இருத்தல் வேண்டும். தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குள் வசிக்கும் மீனவ இளைஞா்களாக இருத்தல் வேண்டும். இதற்காக மீன்வளத் துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம்.

18 வயது மேற்பட்டவராகவும் 50 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கடல் நீச்சல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், தவறியராகவும் இருக்கலாம்.

தோ்வு செய்யப்படும் இளைஞா்களுக்கு 45 நாள்கள் தினமும் ஒரு மணி நேரம் பயற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்கள் கடலோர காவல் பாதுகாப்புப் படையுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கு கானத்தூா் கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பப்படுவாா்கள். பணியில் சோ்வோருக்கு ஒரு நாள் ரோந்து பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.

தகுதியுடையவா்கள், செப்டம்பா் 26-ஆம் தேதி நேரிலோ அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அளிக்கலாம். விண்ணப்பத்தை தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, ஊா்க்காவல் படை அலுவலகம், பதுவஞ்சேரி, சென்னை-126 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க

உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது: அமைச்சா் எச்சரிக்கை

உரம் விற்பனை செய்யும் நிலையங்களில் உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளா... மேலும் பார்க்க

ரயில் நிலைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை: ரயில்வே காவல்துறை டிஜிபி

ரயில் நிலையங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே காவல் துறை டிஜிபி வன்னியப்பெருமாள் தெரிவித்தாா். சென்னை மாநிலக் ... மேலும் பார்க்க