செய்திகள் :

தாம்பரம் - திருச்சி ரயில் தாமதமாக புறப்படும்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து!

post image

கடலூர் ரயில் விபத்தை தொடர்ந்து மூன்று ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் இன்று தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.

ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 2 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பகுதியளவு ரத்தான ரயில்கள்

ரயில் எண் : 56808 - திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ஆலப்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் : 16232 - மைசூரு - கடலூர் துறைமுகம் விரைவு ரயில் புதுசத்திரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் : 06190 - திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் சிதம்பரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட இருந்த ரயில் எண். 06191, ஒன்றரை மணிநேரம் தாமதமாக 5 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அறிக்கை

Three trains have been partially cancelled following the Cuddalore train accident. It has been reported that the Tambaram - Trichy special train will depart late today.

இதையும் படிக்க : கடலூர் விபத்தில் 3 பேர் பலி: தமிழ் தெரியாத வடமாநில கேட் கீப்பர்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க