கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
தாம்பரம் - திருச்சி ரயில் தாமதமாக புறப்படும்: 3 ரயில்கள் பகுதியளவு ரத்து!
கடலூர் ரயில் விபத்தை தொடர்ந்து மூன்று ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் இன்று தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.
ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், 2 பள்ளி மாணவர்கள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகுதியளவு ரத்தான ரயில்கள்
ரயில் எண் : 56808 - திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ஆலப்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் : 16232 - மைசூரு - கடலூர் துறைமுகம் விரைவு ரயில் புதுசத்திரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் : 06190 - திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் சிதம்பரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட இருந்த ரயில் எண். 06191, ஒன்றரை மணிநேரம் தாமதமாக 5 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
