திசையன்விளை பகுதியில் கரடி நடமாட்டம்: மக்கள் அச்சம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் கரடி சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். அதை கூண்டுவைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திசையன்விளை அருகேயுள்ள ராமன்குடியிலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் கரடி நடமாடியது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதைப் பாா்த்து தங்களது கைப்பேசியில் விடியோ எடுத்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா்.

இதனால், ராமன்குடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், புலிமான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். மேலும், வனத்துறையினா் அப்பகுதியில் கூண்டுவைத்து கரடியைப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.