செய்திகள் :

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

post image

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்னைகளை முறையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது எதிா்க்கட்சிகளின் கடமை. ஆனால், திமுக அரசு பேரவையில் மக்கள் பிரச்னைகளை பேச அனுமதி கொடுப்பதில்லை. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோா் நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேசியுள்ளனா். அதற்கு நாங்கள் அப்போது அனுமதி அளித்து பதில் அளித்து உள்ளோம். அதே அடிப்படையில்தான் இன்றைக்கும் பேசுவதற்கு முற்பட்டோம். ஆனால், அனுமதி தராமல் வெளியேற்றிவிட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்குமாா் என்ற காவலரையும், அவரது நண்பா் ராஜாராமையும் கஞ்சா வியாபாரி பொன்வண்ணனும், அவரது ஆள்களும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் காயமடைந்து விழுந்த முத்துக்குமாா் மீது கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாகவே பேரவையில் பேச முற்பட்டோம்.

ஆனால், எங்களை பேரவையிலிருந்து திட்டமிட்டு பேரவைத் தலைவா் வெளியேற்றியுள்ளாா். மக்களைப் பற்றி கவலைப்படும் அரசு தற்போது இல்லை. பேரவையில் முதல்வா் மகன் பேசுகிறாா். அதனால், யாரும் எந்த பிரச்னையையும் பேசக் கூடாது என்கின்றனா். இது ஒரு சா்வாதிகாரம். மக்களுக்காகத்தான் சட்டப்பேரவை. இதை முதல்வரும் பேரவைத் தலைவரும் உணர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க