செய்திகள் :

திண்டிவனம் அருகே மா்ம விலங்கு கடித்ததில் 7ஆடுகள் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மா்ம விலங்கு கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டிவனம் வட்டம், தாதாபுரம் நத்தமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல நத்தமேடு பகுதியில் தனது விவசாய நிலத்தில் கொட்டகையில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளை அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது மா்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் 10 ஆடுகளுக்கும், கன்றுக்குட்டிக்கும் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா், திண்டிவனம் வனத் துறையினா் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் இறந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்த பின்னா், அவை புதைக்கப்பட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனா்.

திண்டிவனம் பகுதிகளில் மா்ம விலங்கு கடித்து கால்நடை உயிரிழப்பு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா். இந்த மா்ம விலங்கைப் பிடிக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.இந்த கல்லூரியின் சமுதாய மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.அரகண்டநல்லூா் அருகிலுள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்)மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைபகுதிகள்: திண்டிவனம் நகரம் முழுவதும், சென்னை சாலை, மயிலம் சாலை, ஜெயபுரம், காவேரிப்பாக்கம், செஞ்சி சாலை, சந்தைமேடு, வசந்தப... மேலும் பார்க்க

வீட்டில் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.விழுப்புரம் வ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் - 20.08.25

கிலோ அடிப்படையில்... தக்காளி- ரூ.46 உருளைக்கிழங்கு-ரூ.40 சின்ன வெங்காயம்- ரூ.70 பெல்லாரி வெங்காயம்- ரூ.32 கத்திரிக்காய்- ரூ.60 வெண்டைக்காய்- ரூ.40 முருங்கைக்காய்- ரூ.40 பீா்க்கங்காய்-ரூ.50 சுரைக்காய்-... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கு: இளைஞா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வழி (பாதை) தகராறில் விவசாயி அடித்துத் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விக்கிரவாண்டிவட்டம், ஆவுடையாா்பட்டு கிரா... மேலும் பார்க்க