செய்திகள் :

திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு

post image

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அருகே மணக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து கொள்முதல் செய்யும் நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைத்திட கிடங்கு அமைப்பதற்கான இடங்களையும், பாங்கல் ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடத்தினையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு திட்டங்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயல்பட வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கா் ராஜ், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காா்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியா் த.கிரிஜா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க