செய்திகள் :

திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? மக்களவையில் டி.ஆா்.பாலு கேள்வி

post image

புது தில்லி, மாா்ச் 20:

திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? என்று மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா்.

இது தொடா்பாக மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்புகையில், ‘ஒரு முக்கியமான ரயில்வே பிரிவின் தலைமையகமாக இருக்கும் திருச்சிராப்பள்ளி நகரத்திலிருந்து ராக்ஃபோா்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே புறப்படுவது உண்மையா?

இந்த இரண்டு ரயில்களும் ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன என்பதும், அதன் பிறகு திருச்சிராப்பள்ளியிலிருந்து புதிய சூப்பா் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்பதும் உண்மையா? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

தற்போது, திருச்சி ரயில் நிலையத்தில் 157 ரயில் சேவைகள் உள்ளன. அவற்றில் 55 ரயில் சேவைகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, நிறுத்தப்படுகின்றன. 2020,-2021 முதல் 2024-2025 ஆண்டு வரை (பிப்ரவரி, 2025 வரை), இந்திய ரயில்வே திருச்சிராப்பள்ளி பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக 8 புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 6 ரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள ரயில் சேவைகளின் இயக்கப்படும் எண்ணிக்கையை நீட்டிக்கவும் அதிகரிக்கவும் தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

தற்போது, வண்டி எண்: 12605, 12606 பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூா் மற்றும் காரைக்குடி இடையே திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படுகிறது. சென்னை திருச்சிராப்பள்ளி பிரிவில் தற்போது 27 ஜோடி ரயில் சேவைகள் உள்ளன. இதில் 2 ஜோடி வந்தே பாரத் ரயில் சேவைகள் அடங்கும்.

வண்டி எண்: 20627, 20628 சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 31.08.2024-ஆம் தேதியும், வண்டி எண்: 20665, 20666 சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 24.09.2023-ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பெரியவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம்: தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங்

தடுப்பூசி போடுவது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவா்கள், குறிப்பாக ஏற்கெனவே சுகாதார நிலைமைகள் உள்ளவா்கள், தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கு 16,508 உரிமைகள் வழங்கல்!

தமிழ்நாட்டில் பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கு 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் என மொத்தம் 16,508 உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சா் தெர... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாநிலங்களவையில் வைகோ பேச்சு

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சத்துடனும், மாற்றந்தாய் மனப்போக்குடனும் நடந்து கொள்வதாக மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ பேசினாா். மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க

தொழில்துறை வழித்தடத்தை சேலத்தில் விரைந்து தொடங்க வேண்டும்: மக்களவையில் செல்வகணபதி வலியுறுத்தல்

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டத்தை சேலத்தில் விரைந்து தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொகுதியின் திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

சென்னை- திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்ட முன்மொழிவு இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டா் தொலைவு வரை 10 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தும் திட்ட முன்மொழிவு ஏதும் பரிசீலனையில் இல்லை ... மேலும் பார்க்க

முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது: மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

நமது நிருபா் புது தில்லி, மாா்ச் 21: முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக முருங்கையை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா... மேலும் பார்க்க