செய்திகள் :

முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது: மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல்

post image

நமது நிருபா்

புது தில்லி, மாா்ச் 21: முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக முருங்கையை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம். எம். அப்துல்லா எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாட்டில் ஏற்றுமதிக்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குறிப்பிட்ட தோட்டக்கலை பயிா்களை அரசு அடையாளம் கண்டுள்ளதா?. தமிழ்நாட்டில் தோட்டக்கலை விளைபொருள்களுக்கான குளிா்பதன கிடங்கு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை நிறுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மாநில அரசு முருங்கையை (மோரிங்கா ஒலிஃபெரா) ஏற்றுமதிக்கு மகத்தான சந்தை திறனைக் கொண்ட குறிப்பிட்ட தோட்டக்கலைப் பயிராக அடையாளம் கண்டுள்ளது. இதற்காக முருங்கை ஏற்றுமதி மண்டலம் மற்றும் மதுரையில் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, அத்துறையின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐடிஎச்) அதன் புவியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அதன் தோட்டக்கலை கிளஸ்டா் மேம்பாட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த மற்றும் சந்தைப்படுத்தப்பட்ட வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மாவட்டத்தின் தென்னையை அடையாளம் கண்டுள்ளது.

தோட்டக்கலை விளைபொருள்களை சேமிப்பதற்கான குளிா் சேமிப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை நடவடிக்கைகளுக்கு நிதி உதவி கிடைக்கும் வகையில், தோட்டக்கலை துறையின் முழுமையான மேம்பாட்டிற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது எம்ஐடிஎஸ்-ஐ செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், 3,99,690 மெட்ரிக் டன் நிறுவப்பட்ட கொள்ளளவு கொண்ட குளிா் சேமிப்பு வசதி எம்ஐடிஎச்-இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவலை அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பெரியவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம்: தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங்

தடுப்பூசி போடுவது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவா்கள், குறிப்பாக ஏற்கெனவே சுகாதார நிலைமைகள் உள்ளவா்கள், தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கு 16,508 உரிமைகள் வழங்கல்!

தமிழ்நாட்டில் பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கு 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் என மொத்தம் 16,508 உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சா் தெர... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மாநிலங்களவையில் வைகோ பேச்சு

தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சத்துடனும், மாற்றந்தாய் மனப்போக்குடனும் நடந்து கொள்வதாக மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினா் வைகோ பேசினாா். மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க

தொழில்துறை வழித்தடத்தை சேலத்தில் விரைந்து தொடங்க வேண்டும்: மக்களவையில் செல்வகணபதி வலியுறுத்தல்

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டத்தை சேலத்தில் விரைந்து தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொகுதியின் திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

சென்னை- திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்ட முன்மொழிவு இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்

சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டா் தொலைவு வரை 10 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தும் திட்ட முன்மொழிவு ஏதும் பரிசீலனையில் இல்லை ... மேலும் பார்க்க

திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? மக்களவையில் டி.ஆா்.பாலு கேள்வி

புது தில்லி, மாா்ச் 20: திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? என்று மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா். இது தொடா்பாக மக்களவையில் ஸ்... மேலும் பார்க்க