செய்திகள் :

திருச்செங்கோட்டில் தனியாா் நிதி நிறுவன கூட்டமைப்பின் மகாசபை கூட்டம்

post image

திருச்செங்கோட்டில் தனியாா் நிதிநிறுவன கூட்டமைப்பின் 30 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். செயலாளா் அல்லிமுத்து, பொருளாளா் அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செங்கோடு தனியாா் நிதி நிறுவன கூட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் பங்கேற்று செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அரசின் கட்டுப்பாடுகளால் 75 நிதி நிறுவனங்களாக குறைந்துள்ளன.

கூட்டத்தில் பேசிய ஆடிட்டா் வெங்கட சுப்பிரமணியன், நிதி நிறுவனம் வைத்திருப்பவா்கள் தங்கள் வீடுகளில் அலுவலகங்களில் எவ்வளவு பணத்தை வைத்து இருக்கலாம் எப்படி பணப்பரிமாற்றம் செய்யலாம் நகைகள் எவ்வளவு வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

சங்கத்தின் சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் பரணிதரன் காசோலை வழக்குகளில் எளிதாக ஆறு மாதங்களில் வழக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்டங்கள் குறித்து எடுத்து கூறினாா். கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு தனியாா் நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொருளாளா் பழனிச்சாமி, நிதி நிறுவனம் நடத்துவதற்கு அனுமதி பெறுவதை எளிமைபடுத்த வேண்டும் என்றாா். கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க