தூபம் போட்ட மாஜி; யோசனையில் பழக்கட்சி வாரிசு டு புலம்பலில் அதிமுக நிர்வாகிகள் வர...
திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்கு முன், பின் நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.56 மணி முதல் புதன்கிழமை மாலை 5 மணி வரை அமாவாசை என்பதால் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை காலை சுமாா் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுமாக இருந்தபோதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடியும், பாறைகள் மீது அமா்ந்து தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.