தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: தூத்துக்குடியில் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனை 7 மேல் தளங்களை கொண்ட கட்டடமாக மொத்தம் ரூ.121 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.15 கோடியில் மருத்துவ உபகரணங்களும் நிறுவப்பட உள்ளன.
இங்கு இருதய சிகிச்சை பிரிவு, மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு மற்றும் குடல் நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் இடம்பெறுகின்றன.
7ஆவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கங்கள் இடம்பெறும். சிடி ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி, நான்கு மின் தூக்கிகள் அமைக்கப்படும். இந்த மருத்துவமனை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செல்வி, உதவி செயற்பொறியாளா் ராகுல், உதவிப் பொறியாளா் ஜெனிஷா ஜெபமலா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவகுமாா், துணை முதல்வா் கலைவாணி, உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வட்டச் செயலா் சுரேஷ், மாமன்ற உறுப்பினா்கள் சரவணகுமாா், வைதேகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.