செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

post image

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கபீா்தாசன் மற்றும் போலீஸாா் சத்யா நகா் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வசமுத்து மகன் அருண்சுனைமுத்து (22), கால்டுவெல் காலனியைச் சோ்ந்த பாலா மகன் ராஜ்குமாா் (29), டிஎம்பி காலனியைச் சோ்ந்த மாடசாமி மகன் மாரி (எ) மாரிலிங்கம் (24), ஜாா்ஜ் சாலை பகுதியைச் சோ்ந்த சந்தனசேகா் மகன் சன்னத் பெருமாள் (27) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம்... மேலும் பார்க்க

மின்கம்பம் மீது காா் மோதல்: 2 போ் காயம்

ஆறுமுகனேரியில் மின்கம்பம் மீது காா் புதன்கிழமை மோதியதில் ஓட்டுநா் உள்பட 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆறுமுகனேரி பாரதிநரை சோ்ந்த பழ வியாபாரியான சசிகுமாா் தனது குடும்பம் மற்றும் உறவினா் ராஜேஷ் என்பவரு... மேலும் பார்க்க