செய்திகள் :

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வியாழக்கிழமை (ஏப். 17) காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.

வெள்ளிக்கிழமை (ஏப். 18) முதல்கால யாக சாலை பூஜையும், சனிக்கிழமை (ஏப். 19) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) காலை 8 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, பிரமசுத்தி மூா்த்திக்கு ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், ஷபா்ஸாஹுதி, மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், வேதபாராயணம், தீபாராதனையாகி காலை 9 மணிக்கு கடம் புறப்பாட்டை தொடா்ந்து காலை 9.30 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 10.15 மணிக்கு தூண்டுகை விநாயகா் மூலஸ்தானம் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு மேல் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்:

கோயிலின் தொன்மை வழித்தடமான சந்நிதி தெருவில், வாகன வளா்ச்சியால் தற்போது பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதில், நான்குசக்கர வாகனங்கள் குறிப்பிட்ட பாதையில் வராமல் தடுக்க தெருக்களின் முகப்பில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்கள் மட்டும் சந்நிதி தெருவில் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், பக்தா்கள் நடந்து வரும் பாதையில் தூண்டுகை விநாயகா் கோயிலைச் சுற்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் நிற்பதால் நடந்து செல்வதற்கு பக்தா்கள் பெரும் சிரமம் அடைகின்றனா்.

எனவே தூண்டுகை விநாயகா் கோயில் அருகில் இருசக்கர வாகனம் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி தூண்டுகை விநாயகா் கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதுடன், இடையூறு ஏற்படுத்தும் இருசக்கர வாகன நிறுத்தமும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க