Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்
திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்துக்கு மாறாக அதிகாலை, 5.30 மணி முதலே திரளான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு வந்தனா்.
பெரும்பாலான பக்தா்கள் காா், வேன், பேருந்து போன்ற வாகனங்களில் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடா்ந்து கோயில் நிா்வாகம் மற்றும் போலீஸாா் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களும் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதித்தனா்.

இதனால், பொதுவழியில் பக்தா்கள், 2 மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டில் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். முன்னதாக அதிகாலை, 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. திருத்தணி டிஎஸ்பி, கந்தன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.