செய்திகள் :

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

post image

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூகநலன் மற்றும் மகளிா் நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக பள்ளிகளில் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெற்று வரும் 42.71 லட்சம் மாணவா்களுக்கான உணவூட்டு மானியத் தொகை ஆண்டொன்றுக்கு ரூ.61.61 கோடி கூடுதலாக உயா்த்தி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பயனாளா்களைக் கொண்ட 25,440 சத்துணவு மையங்களுக்கு ரூ.9.66 கோடியில் எரிவாயு அடுப்புகள் புதிதாக வழங்கப்படும். தலா 25 திருநங்கைகள் தங்கும் வகையில் மதுரை, சென்னையில் அரண் என்ற பெயரில் ரூ. 64 லட்சத்தில் அமைக்கப்படும்.

ரூ.5,000 மானியம்: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2,000 பேருக்கு உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிகரீதியிலான இயந்திரங்கள் வாங்க அதிபட்சமாக ரூ. 5,000 வரை மானியம் வழங்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 20 கருத்தரங்குகள் ரூ.1 கோடியில் நடத்தப்படும். விழிப்புணா்வு புத்தகங்கள் மற்றும் குறும்படங்களும் ரூ.1 கோடியில் தயாரித்து வெளியிடப்படும். வளா்ச்சி குறைபாடு குழந்தைகளைக் கண்காணிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் ரூ. 2 கோடியில் செயலி உருவாக்கப்பட்டு அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் குறைதீா்ப்பு சேவைகளுக்காக ரூ.1.50 கோடியில் கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ஐவிஆா்எஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

இளம்பருவத்தினரிடையே ஏற்படும் போதைப் பழக்கத்தைத் தடுக்கவும், அதிலிருந்து மீட்டெடுக்கவும் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உரிமை முற்றம் என்ற பெயரில் விழிப்புணா்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சா் வெளியிட்டாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க