செய்திகள் :

திருமணம், குழந்தை பெறுதல் சிக்கலாகுமா? தம்பதியை அதிர்ச்சியடைய செய்த மருத்துவர்!

post image

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி கண் பிரச்சனை காரணமாக உள்ளூர் கண் மருத்துவரை அணுகியுள்ளனர். அங்கு அந்த மருத்துவர் அவர்களை பரிசோதித்த பின்னர் கண் பிரச்சனைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலுக்கும் தொடர்பு இருப்பது குறித்து கருத்து தெரிவித்து தம்பதியினர்களை அதிர்ச்சடையைச் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த தம்பதி ரெட்டிட் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தம்பதிகளின் பதிவுப்படி" கண் தொடர்பான பிரச்னைக்கு கண் மருத்துவரை அணுகியபோது நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று என்னிடமும் என் மனைவியிடமும் அவர் கேட்டார். அப்போது அவர் ஆஸ்டிஜிமாடிசம் பற்றி பயமுறுத்தும் வகையில் என்னிடம் பேசினார். நான் ஐடியில் வேலை செய்கிறேன்.

ஒரு நாளைக்கு சுமார் பத்து மணி நேரம் திரையைப் பார்ப்பேன் என்று கூறிய போது மருத்துவர் என்னிடம் இந்த தொழிலை இனிமேல் தொடர முடியாது, தொடர்ந்தால் எனக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் மனைவியை பரிசோதனை செய்த பின்பு" நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்குமுன் யாரிடமும் கலந்த ஆலோசிக்கவில்லையா?

கிட்டப் பார்வை உள்ள இரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே இதனால் பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு யோசித்து ஆலோசனை பெறுங்கள்.. என்று மருத்துவர் கூறியதாக அதில் பகிர்ந்திருந்தார்.

எந்தவொரு மருத்துவரும் திருமணம் செய்து கொள்வதைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பெறுவதைப் பற்றியோ மக்களை குற்ற உணர்ச்சியடையச் செய்யக்கூடாது. குறிப்பாக ஆஸ்டிஜிமாடிசம் போன்ற பொதுவான பிரச்னை இருப்பவர்களுக்கு” என்று கூறியிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து, சமூக ஊடகப் பயனர்கள் கடுமையாக இதனை விமர்சித்து வருகின்றனர்.

`நாங்கள் சாக வரவில்லை, இயற்கையோடு வாழ்ந்தோம்' - குழந்தைகளுடன் கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்

கர்நாடகா மாநிலம், உத்தர கர்நாடகா பகுதியில் உள்ள கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதிய... மேலும் பார்க்க

``பாம்புகள் தீண்டவில்லை, விலங்குகள் தாக்கவில்லை ஏனென்றால்.." - இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண்!

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர்... மேலும் பார்க்க

`பூட்டிய வீட்டுக்குள் எலும்புக்கூடு' - கிரிக்கெட் பந்து எடுக்கப்போனபோது அதிர்ச்சி - தீவிர விசாரணை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நம்பள்ளி எனும் பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் அருகில் அந்தப் பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து... மேலும் பார்க்க

காதலியை மறக்க மலையேறிய இளைஞன்; 6 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

முன்னாள் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் மலைப் பகுதிக்குச் சென்ற, இளைஞரை மீட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.28 வயதான லியூ என்ற இளைஞர் தன்... மேலும் பார்க்க

`89 வயதில் உலக சாதனை' - பிரிட்டிஷ் முதல் பாகிஸ்தான் வரை பாராட்டிய `ஃபௌஜா சிங்' சாலை விபத்தில் மரணம்

‘டர்பனட் டொர்னாடோ’ என்று அன்பாக அழைக்கப்படுபவர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 114 -வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர், 2000 முதல் 2013 வரை மொத்தம் 14 ஒன்பது முழு மர... மேலும் பார்க்க