செய்திகள் :

காதலியை மறக்க மலையேறிய இளைஞன்; 6 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

post image

முன்னாள் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் மலைப் பகுதிக்குச் சென்ற, இளைஞரை மீட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

28 வயதான லியூ என்ற இளைஞர் தன் காதலி உடனான பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அதுவும் தனது மொபைல் போன், உணவு அல்லது பாதுகாப்புக்கு தேவையான எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் அவர் மலையின் குகை பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

ஆறு நாட்கள் அப்படியே அலைந்து திரிந்து இருக்கிறார். லியூவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

ஆனாலும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடைசியாக அவர் ஒரு பூங்காவின் கண்காணிப்பு கேமராவில் காணப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் அங்கு தேடி இருக்கின்றனர்.

கடைசியாக அவர் மலைப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு நாட்களும் மலைப்பகுதியில் இருந்த காட்டுப் பழங்களை பறித்து சாப்பிட்டு நீரோடையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் உயிர் பிழைத்திருக்கிறார்.

மலைப்பகுதியில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞரிடம் போலீசார் விசாரிக்கையில் "அவருக்குக் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கிறது, ஒரு மன அமைதிக்காக இதுபோன்ற மலைகளில் சுற்றி திரிந்ததாகக் கூறியிருக்கிறார்"

`நாங்கள் சாக வரவில்லை, இயற்கையோடு வாழ்ந்தோம்' - குழந்தைகளுடன் கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்

கர்நாடகா மாநிலம், உத்தர கர்நாடகா பகுதியில் உள்ள கொகர்னா வனப்பகுதியில் இருந்த மலைக்குகையில் ரஷ்ய பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அப்பகுதிய... மேலும் பார்க்க

``பாம்புகள் தீண்டவில்லை, விலங்குகள் தாக்கவில்லை ஏனென்றால்.." - இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண்!

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர்... மேலும் பார்க்க

திருமணம், குழந்தை பெறுதல் சிக்கலாகுமா? தம்பதியை அதிர்ச்சியடைய செய்த மருத்துவர்!

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி கண் பிரச்சனை காரணமாக உள்ளூர் கண் மருத்துவரை அணுகியுள்ளனர். அங்கு அந்த மருத்துவர் அவர்களை பரிசோதித்த பின்னர் கண் பிரச்சனைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலுக்கும் தொடர்பு... மேலும் பார்க்க

`பூட்டிய வீட்டுக்குள் எலும்புக்கூடு' - கிரிக்கெட் பந்து எடுக்கப்போனபோது அதிர்ச்சி - தீவிர விசாரணை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நம்பள்ளி எனும் பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டின் அருகில் அந்தப் பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கிரிக்கெட் பந்து... மேலும் பார்க்க

`89 வயதில் உலக சாதனை' - பிரிட்டிஷ் முதல் பாகிஸ்தான் வரை பாராட்டிய `ஃபௌஜா சிங்' சாலை விபத்தில் மரணம்

‘டர்பனட் டொர்னாடோ’ என்று அன்பாக அழைக்கப்படுபவர் ஃபௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி 114 -வது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர், 2000 முதல் 2013 வரை மொத்தம் 14 ஒன்பது முழு மர... மேலும் பார்க்க