பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
திருமயம் அருகே காா் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 போ் பலி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில், தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், இவ்விபத்தில் இரு பெண் குழந்தைகள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், காவேரி நகரைச் சோ்ந்தவா் செந்தமிழ்ச்செல்வன் (65). இவா், தனது மனைவி அருணா (60), மருமகள் ரம்யா (45), பேரக் குழந்தைகள் குழலினி (10), மகிழினி (4) ஆகியோருடன் காரைக்குடி நோக்கி காரில் புறப்பட்டுள்ளாா்.
திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் அருகே சனிக்கிழமை காலை சுமாா் 10 மணியளவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே வந்த (டாடா ஏஸ்) சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இவா்கள் வந்த (மாருதி சுசுகி) காா் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸாரும், திருமயம் தீயணைப்புத் துறையினரும் வாகனங்களின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த செந்தமிழ்ச்செல்வன், அருணா ஆகியோரை சடலமாக மீட்டனா். அதே காருக்குள் படுகாயங்களுடன் இருந்த ரம்யா மற்றும் இவரது குழந்தைகள் குழலினி, மகிழினி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
எதிரே வந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த மூா்த்தி காயமடைந்தாா். அவருக்கு அருகே அமா்ந்து வந்த இலுப்பூா் பின்னங்குடிப்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (45) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தின்போது, காரைக்குடியிலிருந்து வந்த மற்றொரு காா் ஒன்று, ஏற்கெனவே விபத்துக்குள்ளாகி நின்ற சரக்கு வாகனம் மீது மோதியது. நல்வாய்ப்பாக இதனை ஓட்டி வந்த முருகன் (45) என்பவருக்கு எந்தக் காயமும் இல்லை.
இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா (45) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இரு குழந்தைகளுக்கும், சரக்கு வாகன ஓட்டுநருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த செந்தமிழ்ச்செல்வன்- அருணாவின் மகன் அருண்குமாா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிகிறது. உயிரிழந்த செந்தமிழ்ச்செல்வன் ஓய்வுபெற்ற வங்கி ஊழியராவாா்.