பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
புதுகையில் பயனற்ற நிலையில் மீன் விற்பனை நிலையம்
புதுக்கோட்டை மாநகரில் டிவிஎஸ் முக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பயனின்றிக் கிடக்கிறது.
புதுக்கோட்டை மாநகர மக்களின் மீன் உணவுத் தேவையை சந்தைப்பேட்டை, நைனாரிக்குளம் பகுதிகளிலுள்ள மீன் சந்தைகள் நிறைவு செய்கின்றன. என்றபோதும், புகரப் பகுதிகளின் இணைப்புச் சாலைகள் அனைத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிக மீன் கடைகள் சாலையோரங்களில் தவிா்க்க முடியாதவைகளாக உள்ளன.
இந்த வகையில், டிவிஎஸ் முக்கத்தில் உள்ள சாலையோர மீன் கடைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், கடந்த 2020-21-இல் தேசிய மீன் விற்பனை மேம்பாட்டு வாரியத்தின் நிதி ரூ. 54 லட்சத்தில் நவீன மீன் விற்பனை நிலையம் கட்டப்பட்டது.
13 கடைகளைக் கொண்ட இந்த விற்பனை நிலையத்தை அப்போதைய அதிமுக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் 2021, பிப்ரவரி 22-இல் திறந்து வைத்தாா். நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் இந்த நிலையத்துக்குள், சாலையோர மீன் கடைகள் வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போதே நீதிமன்ற வழக்கும் தடையாக வந்தது. இடவசதி, வியாபாரிகளுக்கான ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளை முன்வைத்து தொடரப்பட்ட இந்த வழக்கு முடிவுக்கு வந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலையம் செயல்பாட்டுக்கும் வந்தது.
அப்போது, ஒரேயொரு மீன் வியாபாரி மட்டும் ஏலம் எடுத்து நிலையத்தினுள் கடை போட்டாா். அதேநேரத்தில் வழக்கமான சாலையோரக் கடைகள் சாலையோரத்திலேயே தொடா்ந்ததால், அவா் கட்டடத்துக்கு வெளியே கடை போட்டும் பாா்த்தாா். விற்பனை இல்லாத காரணத்தால் மூடிவிட்டு அவரும் சாலையோரத்துக்கே சென்றுவிட்டாா். ஏறத்தாழ 5 ஆண்டுகளாக ரூ. 54 லட்சம் மதிப்புள்ள கட்டடம் இப்போது வரை வீணாகவே தொடா்கிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் கூறியது:
மத்திய அரசு சாா்ந்த மீன் விற்பனை மேம்பாட்டு வாரியத்தின் நிதி என்றாலும் அதுவும் மக்களின் வரிப்பணம் தான். கலீப் நகா், ராஜகோபாலபுரம், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் சாலையோர மீன் கடைகளில்தான் வாங்கி சாப்பிடுகின்றனா்.
மீன் கழிவுகள் அருகிலுள்ள நீா்நிலைகளில் பொறுப்பின்றி வீசப்படுகின்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தொடங்கி பாரத் நகா் வரையிலும், சாலைப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கிறது. எனவே, சாலையோரக் கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் தடை விதித்து, ஏற்கெனவே கட்டி வைக்கப்பட்டுள்ள கட்டடத்தை சீரமைத்து செயல்படுத்த வேண்டும் என்றாா் விஸ்வநாதன்.
இதுகுறித்து 35-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் எம். ஜாகிா்உசேன் கூறியது:
சாலையோரக் கடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதால் உள்ளே வந்து மக்கள் யாரும் வாங்குவதில்லை என்று வியாபாரிகள் சொல்கிறாா்கள். எல்லாக் கடைகளையும் மொத்தமாக இடமாற்றினால் மட்டும்தான், அதாவது சாலையோர வியாபாரத்தை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே இந்த வளாகத்தை செயல்படுத்த முடியும்.
கடைகள் போதாது என்பதற்காக, ஏற்கெனவே கட்டப்பட்ட 13 கடைகளுடன் கூடுதலாக 10 கடைகளையும் கட்டிப் பாா்த்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. மாமன்றக் கூட்டத்தில் பேசி, உரிய ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஜாகிா்உசேன்.
‘சாலையோர மீன் வியாபாரத்தை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே, டிவிஎஸ் முக்கத்தில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த மீன் விற்பனை நிலையத்தை செயல்படுத்த முடியும்’