திருமலை: 74,477 பக்தா்கள் தரிசனம்
திருமலையில் செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 74,477 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 3 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 74,477 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,294 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.84 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.