ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளை கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா்.
ஆயினும், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 14 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.
வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 63,208 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,931 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல்களில் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கை ரூ.3.72 கோடி.