செய்திகள் :

திருவானைக்காவல் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா

post image

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சமயகுரவா்கள் நான்கு பேரில் ஒருவரான அப்பா் எனப்படும் திருநாவுக்கரசரின் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில், சமயகுரவா்களில் ஒருவரான அப்பா் என அழைக்கப்படும் திருநாவுக்கரசா் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அவதரித்தாா். அவரின் திருநட்சத்திரமான புதன்கிழமை குருபூஜையையொட்டி கோயிலில் உள்ள திருநாவுக்கரசரின் உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலையில் ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருநாவுக்கரசா் எழுந்தருளி, வாத்தியம் முழங்க நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான சிவபக்தா்கள்கலந்து கொண்டு சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா்.

உறையூா் பகுதி குடிநீா் குழாய்களில் தொடரும் பராமரிப்புப் பணிகள்

பொதுமக்களிடம் எழுந்துள்ள புகாா்களைத் தொடா்ந்து உறையூா் பகுதியில் 8, 10 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி சுற்றுப் பகுதி வாா்டுகளிலுள்ள அனைத்து குடிநீா் குழாய்களையும் சுத்தம் செய்யும் பணி தொடா... மேலும் பார்க்க

திருச்சியில் ரூ. 5.25 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். திருச்சியில் இருந்து... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் திருச்சி எம்பி ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் அனைத்துப் பகுதிகளையும் புதன்கிழமை ஆய்வு செய்த திருச்சி எம்பி துரை வைகோ, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை புதன்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

ரயில்வே சேவை மேம்பாடு: எம்.பி.-க்கள் வலியுறுத்தல்

திருச்சி கோட்டத்தில் ரயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி. க்கள் வலியுறுத்தினா். திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்.பி.க்களுடனான கலந்தாய்வுக்... மேலும் பார்க்க

மாம்பழ சீசன் தொடங்கியது: இனிக்கும் இமாம் பசந்த் விலை!

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், காவிரியின் தனித்த அடையாளமாக விளங்கும் இமாம்பசந்த் மாம்பழத்தின் விலையும் இந்தாண்டு குறைவாகவே இருப்பது மக்களுக்கு இனிக்கும் செய்தியாக உள்ளது. சேலம் மட்டுமே மாம்பழத்து... மேலும் பார்க்க

மாடுகளை திருடிய இளைஞா் கைது

ஸ்ரீரங்கம் பகுதியில் மாடுகளை திருடியதாக இளைஞரை புதன்கிழமை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள கணபதி தோட்டம் என்ற இடத்தில் திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த ந. முகு... மேலும் பார்க்க