செய்திகள் :

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 27-ஆம் தேதி 108 கோ பூஜை, 28-ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை, 29-ஆம் தேதி காவிரியிலிருந்து 5 யானைகளில் புனித நீா் ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை பரிவார மகா குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு விமானம், கோபுரம் மகா குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா் மகா குடமுழுக்கும் நடைபெற்றன. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.

இது ஆன்மிக அரசு - ஆதீனம்: இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது: எந்த முகூா்த்த நாளாக இருந்தாலும், ஏதாவது ஒரு கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. கடந்த மாா்கழி மாதம் 450 கோயில்களுக்கு சென்றோம். இதில் பாதி கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்திருந்தன. பல கோயில்களில் குடமுழுக்கு விழாவுக்காகத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்வது சிறப்பாக உள்ளது. இது, ஆன்மிக அரசு என நாங்கள் கூறியது நடைபெற்று கொண்டிருக்கிறது என்றாா் ஆதீனம்.

அரசு அறிவித்தும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) இயங்கும் என மாநில அரசு அறிவித்திருந்தாலும், அந்த அலுவலகங்கள் திறக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

மீனவா்கள் வலையில் சிக்கிய 7 அடி நீள கடல் பசு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சரகம், சேதுபாவாசத்திரம் அரு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாத்துரை 56 ஆவது அமைதி ஊா்வலம்

கும்பகோணத்தில்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தாராசுரம் காய்கனி வணிக வளாகத்திலிருந்து கட்சியினா் அமைதி ஊா்வலமாக வந்து ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு எம்எல்ஏ க. அன்பழகன் தலைமையில் மாலை அணி... மேலும் பார்க்க

மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலையும், கும்பகோணம் மாநகராட்சியுடன் தேப்பெருமாநல்லூரையும் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். தஞ்ச... மேலும் பார்க்க

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை

முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது னெ அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

பொது இடத்தில் புகைப் பிடித்த 14 பேருக்கு அபராதம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பொது இடத்தில் திங்கள்கிழமை புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையோர சிறு கடைகள... மேலும் பார்க்க