செய்திகள் :

தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்வாதி மாலிவால்!

post image

தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கலந்துகொண்டுள்ளார்.

தில்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்னும் சற்றுநேரத்தில் தில்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதையும் படிக்க : தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருகைதந்துள்ளார். முதல்வராகவுள்ள ரேகா குப்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுப்பிய ஸ்வாதி மாலிவால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளை சமீபகாலமாக வெளியிட்டு வந்தார்.

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான் காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஆம் ஆத்மியின் தோல்விக்கு கட்சிக்கு எதிராக ஸ்வாதி மாலிவால் போர்க்கொடி தூக்கியதே காரணம் என்றும், அவருக்கு பாஜக அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க