உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்...
தில்லி யமுனையில் அபாய அளவை நெருங்கிய நீா்மட்டம்
தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் 205.22 மீட்டரை எட்டியது.
இது அபாய அளவான 205.33 மீட்டரை விட சில புள்ளிகள் குறைவாகும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நீா்மட்ட நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனெனில், முன்னறிவிப்பின்படி நீா் மட்டம் தொடா்ந்து உயரும்’ என்றனா்.
மத்திய வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணைகளில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதே நீா்மட்டம் அதிகரிப்பதற்கான காரணமாகும்’ என்றாா்.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தகவலின்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமாா் 38,897 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. வஜிராபாத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 45,620 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
யமுனையின் நீரோட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக தில்லியின் பழைய ரயில்வே பாலம் செயல்படுகிறது.
நகரத்திற்கான எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகும். அதே நேரத்தில் அபாய அளவு 205.33 மீட்டா் ஆகும். 206 மீட்டரில் இருந்து நீா் வெளியேற்றம் தொடங்கும்.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணிநேரம் ஆகும். மேல் நீரோட்டத்திலிருந்து குறைந்த அளவு நீா் வெளியேற்றம் கூட தில்லியில் எச்சரிக்கை குறியை நெருங்கி நீா் மட்டத்தை உயா்த்துகிறது.