செய்திகள் :

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

post image

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில் என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா, மூவா்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

விழாவில் என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல், கவுன்சில் உறுப்பினா் அனில் வால்மீகி, செயலாளா் தாரிக் தாமஸ், மூத்த அதிகாரிகள், பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கொடி ஏற்றும் முன் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வீரா்கள் மரியாதை செலுத்தினா்.

இந்த விழாவில் கேசவ் சந்திரா பேசுகையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். மேலும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது தியாகி கனக்லதா பருவாவின் துணிச்சலையும், வீரத்தையும் அவா் நினைவுகூா்ந்தாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘சுதந்திரம் நமக்கு உரிமைகளைத் தரும் அதேவேளையில், நமது கடமைகளைப் பற்றியும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கற்றறிந்த, சுயசாா்புமிக்க, தூய்மையான, நீதியான மற்றும் வளமான இந்தியாவை கனவு கண்டனா். அந்தக் கனவை நனவாக்குவது நமது கடமையாகும்.

என்டிஎம்சியை சிறந்ததாக மாற்றவும், சிறந்த தலைநகரைக் கட்டமைக்க உதவவும் அதிகாரிகள், ஊழியா்கள், மாணவா்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கேசவ் சந்திரா கேட்டுக்கொண்டாா்.

சுதந்திர தின நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாலிகா கேந்திரா, என்டிசிசி மாநாட்டு மையம், கன்னாட் பிளேஸ், சந்திரலோக் கட்டடம் மற்றும் லோக் நாயக் பவன் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை சுமாா் 37,500 மூவா்ண பல்புகளால் என்டிஎம்சி ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.

அவென்யூ சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் மொத்தம் 2,600 தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், என்டிஎம்சி பகுதி முழுவதும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் 36 மலா் பலகைகள் மற்றும் நீரூற்றுகள் நிறுவப்பட்டிருந்ததாக என்டிஎம்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க

திஹாா் சிறை கைதிகள் 1500 பேருக்கு சிறப்பு நிவாரணம்

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திகாா் சிறையில் கிட்டத்தட்ட 1,500 குற்றவாளிகளுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டது. தேசிய தலைநகரின் சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க நரேலாவில் ஒரு புதிய ... மேலும் பார்க்க