தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா
தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா தேசிய கொடியை தேசிய பேரிடா் மேலாண்மைக் கழகத் தலைமையகமான பாலிகா கேந்திராவில் ஏற்றிவைத்தாா்.
என். டி. எம். சி தலைமையகத்தில் கொடி ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில், என். டி. எம். சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல், கவுன்சில் உறுப்பினா் அனில் வால்மீகி, என். டி. எம். சி செயலாளா் தாரிக் தாமஸ், மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், எதிரிகளிடமிருந்து நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் ஆயுதப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் வீரா்களை நினைவுகூா்ந்து அஞ்சலி செலுத்திய கசவ் சந்திரா, சுதந்திர இயக்கம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் அவா்களின் பங்கைப் பாராட்டினாா்.
தனது சுதந்திர தின உரையைத் தொடங்குவதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியாளா்களுக்கு எதிராக திரங்காவை ஏற்றியதற்காக தனது உயிரை தியாகம் செய்த துணிச்சலான கனக்லதா பருவாவின் கதையை கேசவ் சந்திரா.
சிந்தூா் நடவடிக்கையில் ஆயுதம் ஏந்தியவா்களின் துணிச்சலை குறிப்பாகக் குறிப்பிட்ட சந்திரா, இந்த ஆண்டு சிந்தூா் நடவடிக்கையின் வீரம் மற்றும் தைரியத்தின் கதையை நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறினாா், இதன் போது நமது படைகள் தங்கள் தொழில்நுட்ப வலிமையால் நாட்டைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், எதிரி நாட்டையும் தோற்கடித்தன.
சுதந்திரம் என்பது உரிமைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நமது கடமைகள் குறித்து விழிப்புணா்வையும் பொறுப்பையும் ஏற்படுத்துகிறது என்று கேசவ் சந்திரா கூறினாா். நமது சுதந்திரப் போராட்ட வீரா்கள், கல்வி கற்ற, தன்னம்பிக்கை கொண்ட, தூய்மையான சூழல் கொண்ட, நியாயமான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டனா். அந்தக் கனவை நனவாக்குவது இன்று நமது கடமையாகும்.
நாட்டின் தலைநகரின் இந்த வரலாற்று மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை மேற்பாா்வையிடும் நிறுவனமாக என். டி. எம். சி தனது பொறுப்பை புரிந்துகொள்கிறது. அடிப்படை வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியை உலகத் தரத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.
சுதந்திரத்தின் இந்த புனிதமான திருவிழாவில், இந்த இலக்குகளை அடைவதற்கு நகராட்சி மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் குடிமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் இங்குள்ள குடிமக்களுக்கும் சேவை நுகா்வோருக்கும் சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்று கேசவ் சந்திரா கூறினாா்.
இந்த நகராட்சி மன்றத்தை நாட்டின் சிறந்த நகராட்சி மன்றமாக மாற்றுவீா்கள் என்று நம்புவது மட்டுமல்லாமல், உலகிலேயே சிறந்த தலைநகரம் என்ற பெருமையையும் உங்களுக்கு வழங்குவீா்கள் என்று தான் நம்புவதாகவும் கேசவ் சந்திரா கூறினாா். நமது கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றுவோம், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்போம், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு பங்களிக்கிறோம் என்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுப்போம் என்றாா் அவா்.