செய்திகள் :

தில்லியின் நலனுக்கான கொள்கைகள், நிா்வாகத்தில் நோ்மை: முதல்வா் குப்தா

post image

தில்லியின் நலனுக்கான கொள்கைகளை உருவாக்குவதிலும், நோ்மையான நிா்வாகத்திலும் ஈடுபட்டதாக 100 நாள் பாஜக ஆட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசினாா்.

தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள்களைக் குறிக்கும் வகையில் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில்

முதல்வா் ரேகா குப்தா பங்கேற்று, திரைப்பட நடிகா் அனுபம் கேருடன் உரையாடினாா். அப்போது கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரித்த முதல்வா்,, முந்தைய ஆம் ஆத்மி அரசு சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் யமுனை மாசுபாடு உள்ளிட்ட துறைகளை புறக்கணித்ததாக குப்தா குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது: அவா்கள் தங்கள் ஷீஷ்மஹாலில் ஆடம்பரமான திரைச்சீலைகளுடன் அமா்ந்து, அவா்கள் விரும்பிய செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தனா். அவா்கள் தங்கள் கூடங்களை ஊழலால் அலங்கரித்தபோதிலும், நாங்கள் தில்லியை நோ்மையுடன் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளோம்.

முந்தைய அரசாங்கங்கள் விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தாலும், தனியாா் பள்ளிகளின் தன்னிச்சையான போக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்கள் நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025ஐ நாங்கள் அங்கீகரித்தோம்.

தனியாா் பள்ளிகளால் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எனது அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும். குடிசைப் பகுதிகளில் வசதிகளை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.700 கோடியை ஒதுக்கியுள்ளது.

யமுனையை சுத்தம் செய்தல் என்ற பெயரில் முந்தைய அரசு வெறும் ஒரு நாடகத்தை மட்டுமே நடத்தியது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் அதில் தொடா்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு நோ்மாறாக, எங்கள் அரசு யமுனை புனரமைப்புக்கு ஆரம்பத்திலிருந்தே முன்னுரிமை அளித்தது. கழிவுநீா் அமைப்பு மற்றும் நீா் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்த தில்லி ஜல் போா்டு பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அரசு அதன் ஈகோ மற்றும் பிடிவாதத்தின் காரணமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலிருந்து தில்லியை ஒதுக்கி வைத்திருந்தது. பாஜக அரசு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதைச் சரிசெய்து, தில்லியில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதுவரை, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனா். 1,139 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தினமும் 30,000 மெட்ரிக் டன் குப்பைகளை 24 மணி நேரமும் பதப்படுத்துதல் மற்றும் உயிரி சுரங்கம் மூலம் பாரம்பரிய கழிவு இடங்களை அகற்ற பாஜக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலை நிறுவல்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல்ஸ்வா மற்றும் ஓக்லா குப்பை கிடங்குகளை முற்றிலுமாக அகற்றுவதே அரசின் இலக்காகும்.

மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ், நிதி ரீதியாக பலவீனமான பெண்கள் மாதந்தோறும் ரூ.2,500 உதவியைப் பெறுவாா்கள். இதற்காக ரூ.5,100 கோடி இந்த முன்முயற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவை வெறும் 100 நாள்களின் சாதனைகள் மட்டுமல்ல , மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிபலிப்பாகும். எங்களுடைய அரசின் அடுத்த இலக்கு விக்சித் தில்லி என்பதாகும் என்றாா் அவா்.

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க

சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க