தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்
தில்லியின் நலனுக்கான கொள்கைகள், நிா்வாகத்தில் நோ்மை: முதல்வா் குப்தா
தில்லியின் நலனுக்கான கொள்கைகளை உருவாக்குவதிலும், நோ்மையான நிா்வாகத்திலும் ஈடுபட்டதாக 100 நாள் பாஜக ஆட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசினாா்.
தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள்களைக் குறிக்கும் வகையில் ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில்
முதல்வா் ரேகா குப்தா பங்கேற்று, திரைப்பட நடிகா் அனுபம் கேருடன் உரையாடினாா். அப்போது கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரித்த முதல்வா்,, முந்தைய ஆம் ஆத்மி அரசு சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் யமுனை மாசுபாடு உள்ளிட்ட துறைகளை புறக்கணித்ததாக குப்தா குற்றம் சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியது: அவா்கள் தங்கள் ஷீஷ்மஹாலில் ஆடம்பரமான திரைச்சீலைகளுடன் அமா்ந்து, அவா்கள் விரும்பிய செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தனா். அவா்கள் தங்கள் கூடங்களை ஊழலால் அலங்கரித்தபோதிலும், நாங்கள் தில்லியை நோ்மையுடன் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளோம்.
முந்தைய அரசாங்கங்கள் விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தாலும், தனியாா் பள்ளிகளின் தன்னிச்சையான போக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்கள் நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025ஐ நாங்கள் அங்கீகரித்தோம்.
தனியாா் பள்ளிகளால் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒழுங்குபடுத்த எனது அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும். குடிசைப் பகுதிகளில் வசதிகளை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.700 கோடியை ஒதுக்கியுள்ளது.
யமுனையை சுத்தம் செய்தல் என்ற பெயரில் முந்தைய அரசு வெறும் ஒரு நாடகத்தை மட்டுமே நடத்தியது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் அதில் தொடா்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கு நோ்மாறாக, எங்கள் அரசு யமுனை புனரமைப்புக்கு ஆரம்பத்திலிருந்தே முன்னுரிமை அளித்தது. கழிவுநீா் அமைப்பு மற்றும் நீா் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்த தில்லி ஜல் போா்டு பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அரசு அதன் ஈகோ மற்றும் பிடிவாதத்தின் காரணமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலிருந்து தில்லியை ஒதுக்கி வைத்திருந்தது. பாஜக அரசு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதைச் சரிசெய்து, தில்லியில் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதுவரை, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனா். 1,139 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தினமும் 30,000 மெட்ரிக் டன் குப்பைகளை 24 மணி நேரமும் பதப்படுத்துதல் மற்றும் உயிரி சுரங்கம் மூலம் பாரம்பரிய கழிவு இடங்களை அகற்ற பாஜக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலை நிறுவல்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல்ஸ்வா மற்றும் ஓக்லா குப்பை கிடங்குகளை முற்றிலுமாக அகற்றுவதே அரசின் இலக்காகும்.
மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ், நிதி ரீதியாக பலவீனமான பெண்கள் மாதந்தோறும் ரூ.2,500 உதவியைப் பெறுவாா்கள். இதற்காக ரூ.5,100 கோடி இந்த முன்முயற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவை வெறும் 100 நாள்களின் சாதனைகள் மட்டுமல்ல , மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிபலிப்பாகும். எங்களுடைய அரசின் அடுத்த இலக்கு விக்சித் தில்லி என்பதாகும் என்றாா் அவா்.