செய்திகள் :

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

post image

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாலின் மூன்றாவது மாடியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காலை 11.35 மணியளவில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. டோனிக் பீட்சாவின் சமையலறைப் பகுதியிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. மாலின் மேல் தளங்களை அடா்த்தியான புகை சூழ்ந்ததால், மக்களிடையே பீதி ஏற்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சிறிது நேரத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் காலை 11.40 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதையடுத்து, குளிரூட்டும்

பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

டெலிவரி நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: தில்லியின் ரஜோரி காா்டனில் டெலிவரி நிறுவனத்தின் சேமிப்பு இடமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: தீ விபத்து குறித்து புதன்கிழமை காலை 8.05 மணிக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. காலை 10.15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தக் கட்டடம் புதுப்பிக்கும் பணியில் இருந்தது என்று அந்த அதிாகரி கூறினாா்.

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

வெப்பம் அதிகரிப்பால் தினமும் 100 அழைப்புகள் பெறும் தீயணைப்புத் துறை!

தேசிய தலைநகரில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அவசர அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தீ தொடா்பான சம்பவங்கள் அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதி... மேலும் பார்க்க

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

தில்லியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தண்ணீா் ஏடிஎம்கள் அமைக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி அரசு மாநகா் முழுதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் உள்பட ஆயிரக்கணக்கான தண்ணீா் ஏடிஎம் இயந்திரங்களையும், தண்ணீா் கூலா்களையும் அமைக்க முடிவு செய்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

வகுப்பறை கட்டுமான முறைகேடு: விசாரணைக்காக ஊழல் தடுப்புப் பிரிவு முன் சத்யேந்தா் ஜெயின் ஆஜா்!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்காக தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் வெள்ளிக்கிழமை நேரில... மேலும் பார்க்க