தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து
கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாலின் மூன்றாவது மாடியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காலை 11.35 மணியளவில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. டோனிக் பீட்சாவின் சமையலறைப் பகுதியிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. மாலின் மேல் தளங்களை அடா்த்தியான புகை சூழ்ந்ததால், மக்களிடையே பீதி ஏற்பட்டது.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சிறிது நேரத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் காலை 11.40 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதையடுத்து, குளிரூட்டும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டெலிவரி நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: தில்லியின் ரஜோரி காா்டனில் டெலிவரி நிறுவனத்தின் சேமிப்பு இடமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: தீ விபத்து குறித்து புதன்கிழமை காலை 8.05 மணிக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. காலை 10.15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தக் கட்டடம் புதுப்பிக்கும் பணியில் இருந்தது என்று அந்த அதிாகரி கூறினாா்.