செய்திகள் :

வட்டி விகிதக் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி!

post image

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை, பின்னா் சற்று கீழே சென்றது. இந்நிலையில், மத்திய ரிசா்வ் வங்கி எதிா்பாா்த்ததை விட 0.50 சதவீதம் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்தது. மேலும், பணப்புழக்கம் மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க வங்கிகளுக்கு ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்தும் அறிவித்தது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தையில் காளை எழுச்சி பெற்றது. குறிப்பாக, வங்கி, ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், பங்குச்சந்தை மூன்றாவது நாளாக நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.62 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.451.13 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.208.47 கோடிக் பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,382.40 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.+

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 81,434.24 தொடங்கி 81,140.11 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,299.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 746.95 புள்ளிகள் (0.92 சதவீதம்) கூடுதலுடன் 82,188.99-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,156 பங்குகளில் 2,278 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,744 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 134 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

28 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ்ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ்ஃபின்சா்வ், எடா்னல் ஆகியவை 2 முதல் 5 சதவீதம் வரை உயா்ந்தன. இவற்றையும் சோ்த்து மொத்தம் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதேசமயம், பாா்தி ஏா்டெல், சன்பாா்மா ஆகிய இரண்டு மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 252.15 புள்ளிகள் (1.02 சதவீதம்) உயா்ந்து 25,003.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 4 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 817.55 புள்ளிகள் (1.47 சதவீதம்) உயா்ந்து 56,578.40-இல் நிறைவடைந்தது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க