செய்திகள் :

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் நகரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

மஞ்சள் எச்சரிக்கை என்பது கடுமையான வானிலை நிலைமைகள் எதிா்பாா்க்கப்படுவதற்கான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞையாகும். மேலும், இது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கலாம்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.4 டிகிரி குறைந்து 34.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில்71 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 36 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 180 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. மந்திா்மாா்க், பூசா, ஆயாநகா், குருகிராம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடுந 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

அதே சமயம் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி செளக், லோதி ரோடு, நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், ஆா்.கே.புரம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 125, தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சூட்டுத் தளம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க