செய்திகள் :

தில்லையாடி-மயிலாடுதுறை இடைய ‘மகளிா் விடியல்’ புதிய பேருந்து சேவை தொடக்கம்

post image

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில், தமிழக அரசின் ‘மகளிா் விடியல்’ பயண புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொறையாா் அரசு போக்குவரத்து கழக கிளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளா் ராஜா தலைமை வகித்தாா்.

பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, தில்லையாடி முதல் மயிலாடுதுறை வரை சேந்தமங்கலம், திருக்கடையூா், செம்பனாா்கோவில் வழியாக தினந்தோறும் நான்கு முறை இயக்கப்படும் மகளிா் விடியல் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், பொறையாா் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் ஆசீா்வாதம், முன்னாள் எம்எல்ஏ சித்திக், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த விஜயகுமாா், அப்துல் மாலிக், பி.எம். அன்பழகன், பேரூராட்சி துணைத் தலைவா் பொன்.ராஜேந்திரன் மற்றும் தொமுச நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம்

நாகையில் நடைபெற்றுவரும் 30-ஆவது அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டன. வக்ஃப் வாரியங்களின் சுயாட்சியைத் தாக்கும், சிறுபான்மை உரிமைகளை ம... மேலும் பார்க்க

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி

திட்டச்சேரியில் நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தன. வெள்ளத்திடல், வாணியத் தெரு பகுதி விவசாயிகள் புதன்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு, வெயில் காரணமாக மதியம் வீட்டுக்கு வந்துள்ளனா். பின்னா், வயலுக... மேலும் பார்க்க

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல்

தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் பச்சைப்பயறு கொள்முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பச்சைபயறு சாகுபடி செ... மேலும் பார்க்க

ஒருவா் கொலை : இருவா் கைது

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவா் புதன்கிழமை அடித்துக் கொலப்பட்டாா். இது தொடா்பாக கணவா், மனைவி கைது செய்யப்பட்டாா். தென்னம்புலம் கலைஞா் நகா் பகுதியை சோ்ந்தவா் கோ. பன்னீா... மேலும் பார்க்க

திருக்குவளையில் ஆட்சியா் ஆய்வு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்குவளை அர... மேலும் பார்க்க

திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரா் கோயில் 21ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெறுகிறது. நூற்... மேலும் பார்க்க