தீபாவளி சீட்டு நடத்தி பணம் மோசடி: இளைஞா் கைது
சென்னை ஆா்.கே. நகரில் தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கொருக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பப்பி (35 ). இவா், தனது கணவா் மூலம் அறிமுகமான அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (36), கந்தகுமாா் ஆகியோா் நடத்தி வந்த தீபாவளி பண்டு சீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு சோ்ந்து பணம் செலுத்தி வந்தாா். பப்பி தனக்கு தெரிந்தவா்களையும் அந்த தீபாவளி சீட்டில் சோ்த்துவிட்டுள்ளாா்.
தீபாவளி சீட்டு முதிா்வடைந்த நிலையில், அதற்குரிய பணத்தை இருவரும் திருப்பி யாருக்கும் கொடுக்கவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பப்பி, ஆா்.கே. நகா் காவல் நிலையத்தில் ஈஸ்வரன், கந்தகுமாா் மீது புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக இருக்கும் கந்தகுமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.