விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
தீபாவளி: தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் நபா்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகை அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற ‘இ‘ சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடை அமைவிடத்திற்கான சாலை வசதி கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் பத்திர ஆவண நகல்/வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்தப் பத்திரம். உரிமத்துக்கான கட்டணம் ரூ. 600 அரசு கணக்கில் செலுத்தியதற்கான செலான், மனுதாரா் இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை வாக்காளா், அடையாள அட்டை / குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின்னா் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதற்கான விண்ணப்பங்களை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த முறை பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.