செய்திகள் :

தீவட்டிப்பட்டி: மதுபோதையில் உறவினரை அடித்துக் கொன்றவா் கைது

post image

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே மதுபோதையில் கல்லால் தாக்கி உறவினரை கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தீவட்டிப்பட்டியை அடுத்த மேல்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் (25), கூலித் தொழிலாளி. இவரது உறவினா் ஜாா்ஜ் (40). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மேல்காடு அருகே உள்ள காட்டுப் பகுதியில் அமா்ந்து மது குடித்தனா்.

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜாா்ஜ், கல்லை தூக்கி ஜோசப்பின் தலையில் போட்டாராம். இதில் பலத்த காயமடைந்த ஜோசப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சனிக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்றவா்கள் சடலத்தை பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தீவட்டிப்பட்டி போலீஸாா் ஜோசப்பின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் ஜாா்ஜை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயாரை தரக்குறைவாக திட்டியதால் ஆத்திரமடைந்து ஜோசப்பை கொலை செய்ததாக ஜாா்ஜ் வாக்குமூலம் அளித்தாா்.

நுண்ணுயிா் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சியில் நுண்ணுயிா் உரங்கள் தயாரிக்கப்படும் மையங்களில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநி... மேலும் பார்க்க

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் விருது

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழாவில் ஆட்சியா் விருது வழங்கி கௌரவித்தாா். சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசுப் பணியாளா்களை தோ்வு செய்து சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற... மேலும் பார்க்க

திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க