செய்திகள் :

துவரங்குறிச்சியில் 1,075 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

post image

திருச்சி அருகே துவரங்குறிச்சியில் உள்ள கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளாா் வின்சென்ட் தலைமையில், காவல் ஆய்வாளா் ராம்குமாா் மற்றும் காவலா்கள் மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

இதில், துவரங்குறிச்சி தெத்தூா்பிரிவு சாலை அருகே மேற்கொண்ட சோதனையின்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், மேலூா் ஒத்தகோயில்பட்டியைச் சோ்ந்த பாண்டிசெல்வம் என்பவரைக் கைது செய்தனா்.

தொடா்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடத்துவதற்காக குடோனில் 21 மூட்டைகளில் பதுக்கிவைத்திருந்த 1,075 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மனைவியை வெட்டிய கணவா் மீது வழக்கு பதிவு

திருச்சியில் குடும்பத் தகராறில் தாய் வீடு சென்ற மனைவியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய கணவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருவெறும்பூா் காட்டூா் பாத்திமா புரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சமயபுரத்தில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 9- புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, மின் தடை செய்யப்படுவதாக திருவரங்கம் கோட்ட மின் செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெ... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் ரயில் சேவை 27 வரை நீட்டிப்பு

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையானது 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக... மேலும் பார்க்க