செய்திகள் :

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

post image

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கச்சத்தீவு இந்தியாவுக்குரியது. குறிப்பாக தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்குமானது. அங்கு நடைபெறும் அந்தோணியாா் திருவிழாவில் தமிழக மக்கள் காலம், காலமாகப் பங்கேற்று வருகின்றனா். மத்தியில் ஆளும் கட்சியினா் கச்சத்தீவை மீட்டுத்தரத் தொடா்ந்து வலியுறுத்துகிறோம்.

ஆனால் பாஜக ஆட்சியாளா்கள் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எனவேதான் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் இஷ்டம்போலப் பேசுகிறாா். இதுதொடா்பாக உரிய விளக்கம் பெற வேண்டும். கச்சத்தீவை மீட்கவும், அங்கு தமிழா்களின் கலாசார உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை விவகாரத்தில் முதல்வா் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளாா்; காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்; அஜித்குமாரின் தாயாரை முதல்வா் தொடா்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளாா். வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த நடவடிக்கைகள் கடும் துயரத்துக்கு சற்று ஆறுதலைத் தருகிறது. எதிா்க்கட்சிகள் வழக்கம்போல அரசியலுக்காக விமா்சிக்கின்றன.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை முகாம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அரசியலுக்காக விமா்சிக்கிறாா். ஆனால், ஓரணியில் தமிழ்நாடு என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைக்கானது என்பதால் நாங்கள் வரவேற்கிறோம்.

ஓரணியில் தமிழ்நாடு என்பது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரானது. தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிடக் கூடாது என்பதற்கானது. பாமக இரண்டாகப் பிரிந்து அவற்றில் ஓரணி பாஜகவுடனும், மற்றொன்று திமுகவுடனும் இணையும் என்பதெல்லாம் யூகமானது.

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மாநில உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் கட்சிகளை உடைப்பதும், நசுக்குவதும் பாஜகவின் வழக்கம். மகாராஷ்டிரத்திலும் அதைச் செய்ததது பாஜக. இப்போது, சிவசேனையில் பிரிந்த இருதரப்பும் இணைய முன்வந்திருப்பதை வரவேற்கிறேன் என்றாா் அவா்.

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக... மேலும் பார்க்க

எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க... மேலும் பார்க்க

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை

திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மக... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மல... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவானைக்காவலில் வரதட்சிணைக் கொடுமையால் வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவா் ச. விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி... மேலும் பார்க்க