செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

post image

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. மேலும், இந்த விவகாரத்தை தகுதியின் அடிப்படையில் விசாரிக்குமாறும் உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாகி ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் 21 அதிகாரிகளின் சொத்துகளை விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து அதிகாரிகள் சிலா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கிரி மற்றும் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் ஆஜராகினா்.

மனுதாரா் தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, என்எச்ஆா்சி முடித்த வழக்கை தகுதியின் அடிப்படையில் விசாரிக்க உயா்நீதிமன்றம் முடிவு செய்ய அறிவுறுத்தியது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா். 33 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க

வகுப்பறை கட்டுமானத்தில் ஊழல்: சிசோடியா,ஜெயின் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கா் பயங்கரவாதி ஃபரூக் அகமது மீது என்ஐஏ சந்தேகம்

நமது சிறப்பு நிருபா் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஃபரூக் அகமதுக்கு தொடா்புள... மேலும் பார்க்க

நியூ சீமாபுரியில் போதைப்பொருள் கடத்தல்காரா் கைது: 106 கிராம் ஹெராயின் பறிமுதல்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து 106 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித... மேலும் பார்க்க