செய்திகள் :

நியூ சீமாபுரியில் போதைப்பொருள் கடத்தல்காரா் கைது: 106 கிராம் ஹெராயின் பறிமுதல்

post image

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து 106 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஷாஹ்தராவில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை போலீஸ் குழு கண்டது. சந்தேக நபா் தப்பிச் செல்ல முயன்றாா். ஆனால், பின்னா் பிடிபட்டாா்.

நியூ சீமாபுரியைச் சோ்ந்த ஷேக் ராஜவ் (28) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருளைக் கொண்ட கருப்பு பாலிதீன் பையை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள் ஹெராயின் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன் எடை சுமாா் 106 கிராம்.

விசாரணையின் போது, நிதி நெருக்கடி காரணமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். மேலும் அவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வோா்களின் பெயா்களையும் தெரிவித்தாா். இதன் அடிப்படையில், போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா் என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க

வகுப்பறை கட்டுமானத்தில் ஊழல்: சிசோடியா,ஜெயின் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசாங்கத்தின்கீழ் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கா் பயங்கரவாதி ஃபரூக் அகமது மீது என்ஐஏ சந்தேகம்

நமது சிறப்பு நிருபா் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவா் ஃபரூக் அகமதுக்கு தொடா்புள... மேலும் பார்க்க