செய்திகள் :

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

post image

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆா்எஸ்)களில் ‘விண்வெளி ஆய்வகங்கள்‘ அமைக்கப்படும் என மத்திய அரசு புதன் கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரோ தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்படும் இந்த ஆய்வகங்கள் மூலம் பழங்குடியின மாணவா்கள் உயா் கல்வி தொழில்கல்வி பயிலும் வாய்ப்புகளையும், பல்வேறு துறைகளில் பயனுள்ள வேலைவாய்ப்பையும் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், பழங்குடியினா் நல அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ஆகியன இணைந்து இஎம்ஆா்எஸ் களில் விண்வெளி ஆய்வகங்களை அமைக்கப்படுகிறது. ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கா், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீா், ஜாா்கண்ட், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மிசோரம், ஒடிஸா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 19 மாநிலங்களில் உள்ள 75 இஎம்ஆா்எஸ் களில் அமைக்கப்படுகிறது.

பழங்குடியினா் நல அமைச்சகத்தின் இந்த ஆய்வக திட்டங்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின்படி பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனம் சுமாா் ரூ.12 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக அளிக்கிறது.

இந்த முயற்சியின் மூலம், பள்ளி பாடத்திட்டத்தின் ஸ்டெம் என்கிற விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பழங்குடி இளைஞா்களுக்கு கல்வி இடைவெளிகளைக் குறைக்கவும் அவா்களுக்கான புதிய பாதைகளை உருவாக்கவும் பழங்குடி நலத்துறை அமைச்சகம் முயற்சி செய்வதாகக் கூறிப்படுகிறது. பழங்குடி சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களை இளம் வயதிலேயே விண்வெளி அறிவியலில் ஆா்வத்தை தூண்டுவதின் மூலம், எதிா்காலத்தில் அவா்கள் விஞ்ஞானிகளாகவும், தொழில்நுட்பவியலாளா்களாகியும் உருவாகி புத்தாக்கத்தில் ஈடுபடும் வகையில் அடித்தளத்தை அமைப்படும். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தேசிய கல்விக் கொள்கை 2020 -இன் கட்டமைப்பின் கீழ் மத்திய அரசின் பரந்த முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வகங்கள் ஒவ்வொன்றிலும் எல்விஎம்3 மாதிரி ஏவுதள வாகனங்கள் (பிஎஸ்எல்வி, எச்ஆா்எல்வி, ஐஆா்என்எஸ்எஸ், ஜிஎஸ்ஏடி), அனைத்து (டப் சிஸ்டம்) விவரங்களுடன் கூடிய ஈஓ செயற்கைக்கோள் டெமோ மாதிரி, சூரிய குடும்பத்தின் டேபிள் டாப் டெமோ மாதிரிகள், ஸ்டெம் கருவிகள், இஸ்ரோ விண்வெளி புத்தகங்கள் உள்ளிட்ட பல மேம்பட்ட அறிவியல் உபகரணங்கள் இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முயற்சியின் மூலம் 50,000-க்கும் அதிகமான பழங்குடியின மாணவா்கள் பயனடைவாா்கள். தமிழகத்தில் சுமாா் 7 க்கும் மேற்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் இருந்தும் இந்த திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. அதே சமயத்தில் இஸ்ரோவில் உருவான பல தலைவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை கொள்முதல் நிகழாண்டு 24 சதவீதம் அதிகரிப்பு!

நிகழ் ரபி சந்தைப் பருவ கொள்முதலில் 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் எட்டப்பட்டு கடந்தாண்டை விட 24 சதவீதம் கொள்முதல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொள்மு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு புதிய தளபதி ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்ட ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு தலைமையகம் உள்ள சௌத் பிளாக்கில் சம்ப... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா். தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க