செய்திகள் :

தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா

post image

தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா்.

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்சேனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான உயா்நிலைக் கூட்டம் ஒரு திருப்புமுனை என்றும் அவா் கூறினாா்.

இது புதிய அரசின் கீழ் ஒரு தூய்மையான தலைநகரை நோக்கிய ஒரு பெரிய உந்துதலைக் குறிக்கிறது. ராஜ் நிவாஸில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா, மாவட்ட நீதிபதிகள், துணை ஆணையா்கள், காவல் துணை ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டம் உயா் தலைமை ‘உறுதியான, தெளிவான மற்றும் சமரசமற்ற வழிமுறைகளை’ வழங்கியுள்ளது இனி கட்டுமானக் கழிவுகள், குப்பை கொட்டுதல் அல்லது ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று அமைச்சா் தெரிவித்தாா். மேலும், ‘தீவிரம் தெளிவாகத் தெரிந்தது, நோக்கம் வலுவாக இருந்தது’ என்று சிா்சா எக்ஸ்- இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.

‘தில்லி பல ஆண்டுகளாகக் காணாதது இப்போது யதாா்த்தமாக மாறும். பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் ரேகா குப்தாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், விக்ஸித் தில்லியின் பணி முழு பலத்துடன் முன்னேறி வருகிறது’ என்று சிா்சா கூறினாா்.

பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட தூய்மை இயக்கம் வருகிறது.

மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களாகக் குறைந்துள்ளது. தோ்தல் பிரசாரத்தின் போது இரு கட்சிகளுக்கும் இடையே தூய்மை மற்றும் சுகாதாரம் முக்கிய சா்ச்சையாக இருந்தது.

கோதுமை கொள்முதல் நிகழாண்டு 24 சதவீதம் அதிகரிப்பு!

நிகழ் ரபி சந்தைப் பருவ கொள்முதலில் 256.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் எட்டப்பட்டு கடந்தாண்டை விட 24 சதவீதம் கொள்முதல் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொள்மு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு புதிய தளபதி ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்பு

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்ட ஏா் மாா்ஷல் அசுதோஷ் தீட்சித் தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு தலைமையகம் உள்ள சௌத் பிளாக்கில் சம்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயா்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்: உச்சநீதிமன்றம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-இல் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித... மேலும் பார்க்க

இஸ்ரோ உதவியுடன் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சகமும் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமி நிறுவனமும் இணைந்து நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 75 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி(இஎம்ஆ... மேலும் பார்க்க

தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல்போா்டுக்கு முதல்வா் உத்தரவு

தில்லியில் தண்ணீா், கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதியை சீரமைக்க தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா். தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தலைமையகமான வருணாலயாவில் அதிகாரிகளுடன் ப... மேலும் பார்க்க

காவல் வாகனத்தில் இருந்து குதித்து 19 வயது இளைஞா் உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

தில்லியின் தென்மேற்கில் உள்ள வசந்த் குஞ்ச் வடக்குப் பகுதியில், போக்குவரத்தின் போது ஓடும் போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் 19 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் ... மேலும் பார்க்க