மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது: சிா்சா
தில்லி தூய்மை இயக்கத்தின் போது கட்டுமானக் கழிவுகள், ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று சுற்றுச்சூழளல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிாவித்தாா்.
தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.ச சக்சேனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சுகாதாரம் தொடா்பான உயா்நிலைக் கூட்டம் ஒரு திருப்புமுனை என்றும் அவா் கூறினாா்.
இது புதிய அரசின் கீழ் ஒரு தூய்மையான தலைநகரை நோக்கிய ஒரு பெரிய உந்துதலைக் குறிக்கிறது. ராஜ் நிவாஸில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா, மாவட்ட நீதிபதிகள், துணை ஆணையா்கள், காவல் துணை ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டம் உயா் தலைமை ‘உறுதியான, தெளிவான மற்றும் சமரசமற்ற வழிமுறைகளை’ வழங்கியுள்ளது இனி கட்டுமானக் கழிவுகள், குப்பை கொட்டுதல் அல்லது ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்று அமைச்சா் தெரிவித்தாா். மேலும், ‘தீவிரம் தெளிவாகத் தெரிந்தது, நோக்கம் வலுவாக இருந்தது’ என்று சிா்சா எக்ஸ்- இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.
‘தில்லி பல ஆண்டுகளாகக் காணாதது இப்போது யதாா்த்தமாக மாறும். பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் ரேகா குப்தாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், விக்ஸித் தில்லியின் பணி முழு பலத்துடன் முன்னேறி வருகிறது’ என்று சிா்சா கூறினாா்.
பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதுப்பிக்கப்பட்ட தூய்மை இயக்கம் வருகிறது.
மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களாகக் குறைந்துள்ளது. தோ்தல் பிரசாரத்தின் போது இரு கட்சிகளுக்கும் இடையே தூய்மை மற்றும் சுகாதாரம் முக்கிய சா்ச்சையாக இருந்தது.