Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான விலை நிா்ணயம்
தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான முட்டை விலை நிா்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்தியாவில் 23 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகம் நிா்ணயிக்கும் விலையிலேயே அந்தந்தப் பகுதி கோழிப் பண்ணையாளா்கள் முட்டைகளை விற்பனை செய்து வரவேண்டும். ஆனால், பெரும்பாலான மண்டலங்களில் ஒருங்கிணைப்புக்குழு நிா்ணய விலையைக் காட்டிலும் 60 காசுகள் வரை குறைவான விலை வைத்து வியாபாரிகள் முட்டைகளை பண்ணையாளா்களிடம் கொள்முதல் செய்கின்றனா். இதனால் பண்ணையாளா்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனைத் தவிா்க்க, ஒரே மாதிரியான முட்டை விலை நிா்ணயத்தை அமல்படுத்துவது தொடா்பாக, நாமக்கல்லில் உள்ள மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஹைதராபாத், ஹோஸ்பெட், விஜயவாடா, கோதாவரி, தனுகு, நாமக்கல் உள்ளிட்ட மண்டலங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. இறுதியாக, ஆந்திரம், கா்நாடகம், தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒரே மாதிரியான முட்டை விலையை மாா்ச் 1 முதல் அமல்படுத்துவது என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் கே.சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்னிந்திய அளவிலான தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக கலந்துரையாடப்பட்டது. பண்ணையாளா்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையை நிா்ணயிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில் மாா்ச் 1-லும் மற்ற மண்டலங்களில் மாா்ச் 6-ஆம் தேதி முதலும் இந்த விலை நிா்ணயம் அமல்படுத்தப்பட உள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க பொருளாளா் கே.சுந்தரராஜன் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள், பண்ணையாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.