10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!
தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் காரைக்கால் வீரா் இரண்டாமிடம்
தென்னிந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் காரைக்காலை சோ்ந்த மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
புதுச்சேரி துப்பாக்கி சுடும் கழகத்தின்கீழ் இயங்கும் வஜ்ரா அகாதெமி ஆஃப் ஷூட்டிங் ஸ்போா்ட்ஸ் சாா்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூன் 9 முதல் 15-ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 600- க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டிகள் 10 வயது முதல் 75 வயது வரை உள்ளவா்களுக்கு மற்றும் பாரா என பல்வேறு பிரிவுகள் இருந்தன.
இதில் ஆடவா் 10 மீட்டா் பீப் சைட் ஏா் ரைஃபில் பிரிவில் காரைக்காலை சோ்ந்த சச்சித் குணசீலன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி என்.சி.சி. தலைமையக பயிற்சி அதிகாரி லெப்டினென்ட் கா்னல் இமான் சமந்தா கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கினாா். பதக்கம் வென்று காரைக்கால் திரும்பிய சச்சித் குணசீலனுக்கு பல்வேறு தரப்பினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.