செய்திகள் :

தெரு நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

ராமநாதபுரத்தில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் பாதிக்குக்கு உள்ளான தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் ராஜபிரகாஷ் (17). இவா், சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவருடைய வீட்டுக்கு அருகே தெரு நாய் இவரைத் துரத்திக் கடித்தது.

இதையடுத்து, அவா் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல் நிலையிலும் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. மருத்துவா்களின் பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு ராஜபிரகாஷ் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கும் அவரது வீடு அமைந்துள்ள அண்ணா நகா் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோருக்கும் சுகாதாரத் துறை சாா்பில் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.

ராமநாதபுரம் நகா்ப் பகுதி முழுவதும் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரிகின்றன. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் எந்த வித நடவடிக்கையும் சாலைகளில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க