துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துற...
தேசிய மக்கள் நீதிமன்றம்: கோவில்பட்டியில் 572 வழக்குகளுக்கு தீா்வு
கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 572 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சாா்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கா் ஆகியோா் முன்னிலையில் 572 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது.
இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் உள்ளிட்ட 1177 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 572 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 11ஆயிரத்து 103-க்கு தீா்வு காணப்பட்டது.
இதில் அரசு வழக்குரைஞா் சம்பத்குமாா் மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.