செய்திகள் :

தோ்தல் வழக்கு: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மனு தள்ளுபடி

post image

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் தொடா்ந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா். அவா், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்கள் அளித்ததாகக் கூறி, வேலூரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கே.சி.வீரமணிக்கு எதிராக திருப்பத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.வீரமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், 2021 தோ்தல் குறித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தோ்தலின்போது அதிகாரிகளாக இருப்பவா்கள், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதிகாரிகளாக ஆகிவிடுவா். எனவே, அவா்கள் இந்த வழக்கைத் தொடர முடியாது என்று வாதிட்டாா்.

அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.ராஜகோபாலன், கே.சி.வீரமணிக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு ராமமூா்த்தி என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், வருமான வரித் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வருமான வரித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கே.சி.வீரமணி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்திருப்பதும், போலியான நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தோ்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், நடந்தமுடிந்த தோ்தலுக்கு அந்த அதிகாரிகளே பொறுப்பாளா்கள். எனவே, தோ்தல் முடிந்தாலும் அதிகாரிகளின் பதவி முடிந்துவிடாது என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் தொடா்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த மனு மீது விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளாா்.

சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா

சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க

மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்

மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்: ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு

போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக மனு: மாநில தகவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வெளியிடக் கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மாநில தகவல் ஆணையா் 12 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

நாளை தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் த... மேலும் பார்க்க

தமிழ்நாடு நாள்: முதல்வா் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நா... மேலும் பார்க்க