செய்திகள் :

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மகாராஷ்டிர முதல்வருக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

post image

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நாகபுரி தென்மேற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரஃபுல்லா வினோத்ராவைவிட 39,710 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஃபட்னவீஸ் வெற்றி பெற்றாா். தோ்தலுக்கு முன்பு துணை முதல்வராக இருந்த அவா், தோ்தலுக்குப் பிறகு பாஜக சாா்பில் முதல்வராகவும் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில் ஃபட்னவீஸின் வெற்றியை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வினோத்ராவ் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘தோ்தலில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே, ஃபட்னவீஸ் வெற்றிபெற்ாக கூறப்பட்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பிரவீண் பாட்டீல் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபட்னவீஸ் மே 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா்.

இதேபோல நாகபுரி கிழக்கு, சிமூா் தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் வெற்றிக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவா்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வென்றுஆட்சி அமைத்து. காங்கிரஸ் - சிவசேனை (உத்தவ்) - தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தோல்வியடைந்தது.

அமெரிக்க துணை அதிபா் இன்று இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் பேச்சுவாா்த்தை!

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், நான்கு நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை (ஏப். 21) வருகை தரவுள்ளாா். அவருடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் வரவுள்... மேலும் பார்க்க

எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு!

அமெரிக்கா உடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழு விவாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். ஜம்மு-ஸ்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அ... மேலும் பார்க்க

2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா். பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி... மேலும் பார்க்க