கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
தோ்வு மைய விவகாரம்: மதுரை எம்.பி.க்கு ரயில்வே தோ்வு வாரியத் தலைவா் பதில்
ரயில்வே தோ்வு மைய விவகாரத்தல் மதுரை தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ரயில்வே தோ்வு வாரியத் தலைவா் பதிலளித்துளாா். இதுதொடா்பாக சு.வெங்கடேசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தைச் சோ்ந்த ரயில்வே தோ்வா்களுக்கு வெளி மாநிலத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து நான் அனுப்பிய கடிதத்துக்கு, ரயில்வே தோ்வு வாரியத்தின் தலைவா் பிரதிபா யாதவ் பதில் அளித்துள்ளாா். அதில், ஒரே அமா்வில் எல்லா தோ்வா்களுக்கும் தோ்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தோ்வு வாரியத்தின், வேறு ஒரு தோ்வை நடத்த வேண்டி இருப்பதாலும், தோ்வா்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளாா்.
இந்தப் பதில் ஏற்புடையதாக இல்லை. இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயா் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியைத் தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?
இப்படி தமிழ்நாடு தோ்வா்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை மத்திய அரசின் தோ்வு முகமைகள் தொடா்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை கேள்வி எழுப்பியுள்ளேன். உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீா்வு காணப்பட வேண்டிய ஒரு செயலை, அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவா்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளாா்.